HOP Church

Sep 18, 20201 min

அவர் கரத்தை பற்றிக்கொள்

சாராள் நகைத்தது நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஆபிரகாமும் நகைத்தான்....

சாராள் உள்ளத்தில் நகைத்தாள் ஆபிரகாமும் முகம்குப்புற விழுந்து நகைத்தான்....

இந்த மனிதனால் அற்புதம் நடக்குமென்று விசுவாசிக்க முடியவில்லை....

கடினத்தன்மையை பார்த்து அது நடக்க முடியாது என்று நினைத்தான்....

நம்முடைய சூழ்நிலைகளையும் கடினங்களையும் பார்க்கும்போது நாமும் கூட அப்படிதான் உணர்கிறோம்....

இவர்கள் மத்தியில் தேவன் எங்கே இருக்கிறார்?

நாம் ஏன் குழம்புகிறோம்? ஏன் நம்மால் வாசிக்க முடியவில்லை?

அன்று ஆபிரகாமின் அதே தான் ஆனால் பின்பு ஒருபோதும் இல்லை!

தேவனோடு அவனுக்கு இருந்த உறவு தேவனால் என்ன செய்ய முடியும் என்பதை உணர்த்தியது....

உன்னுடைய கடினமான சூழ்நிலையில் உன் கண்களை மூடி அவர் கரங்களைப் பற்றிக் கொள்....

ஆம் உன் அற்புதம் வெகு தொலைவில் இல்லை!

ஆதியாகமம் 17:17

அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

முதலில் ஆபிரகாம் நகைத்தான் பின்பு விசுவாசித்தான்! உன்னுடைய சூழ்நிலைகள் ஒரு போதும் தேவன் அற்புதங்களை நடப்பிப்பதை தடுக்க இயலாது உன் அவிசுவாசத்தால் மட்டுமே முடியும்!! இன்று ஒரு அற்புதம் நடக்க தேவனை நம்பு!!!

    2
    0