HOP Church
Dec 5, 20201 min
பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது நீ தவறு செய்து விட்டாய் என்று அர்த்தம் இல்லை...
தேவன் நடத்தும் எல்லா செயலுக்கும் பின் ஒரு நோக்கம் உண்டு...
தேவன் ஒரு நோக்கம் இல்லாமல் நம்மை கடுமையான பாதையில் நடத்துவதில்லை...
ஆம்! ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும் முன்பு நீ ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்...
ஒருபோதும் பிசாசானவன் உன்னை குற்றவுணர்ச்சியில் அழித்துவிட இடம் தொடாதே...
பிரச்சனைகள் நம்மை உருவாக்குகின்றன, மேலும் நம்மை மினுமினுக்க வைக்கிறது, இதுவே தேவ திட்டம்!
லூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின் படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
இப்பிரச்சினைகளை சந்திக்கும்பொழுது குற்ற உணர்ச்சியாய் இருக்காதே! தேவனுக்காகவும் அவர் வார்த்தைகளுக்காகவும் நீ காத்திருந்து பெலப்படு!! தாமதம் மறுப்பு அல்ல - தேவன் அவருடைய வேளையில் அதை நிறைவேற்ற காத்திருக்கிறார்!!!