HOP Church
Nov 21, 20201 min
மொர்ததேகாயை கனப்படுத்த தேவன் ராஜாவை தூங்க விடவில்லை....
யோசேப்பை விடுவிக்க பார்வோனுக்கு சொப்பனத்தை தந்தார்....
பவுலை ரோமாவுக்கு கொண்டுசெல்ல அவனோடு பயணம் செய்த 276 பேரை காப்பாற்றினார்....
எலியாவை போஷிக்க அபகரிக்கும் காகத்தை கொடுக்கச் செய்தார்....
முட்டாள் பாலாக்கை அவன் வழியில் நிறுத்த கழுதையைப் பேச வைத்தார்....
உன்னை ஆசீர்வதிக்க அவர் எதையும் செய்வார்!
ஆதியாகமம் 4:15
பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்
உன்னை வியக்க வைக்க தேவன் ஆச்சரியமான காரியங்களை செய்வார்! அவரை விசுவாசித்தால் அற்புதத்தை எதிர்பார்!! உனக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது வழியில் இருக்கிறது!!!