தேவனை பொக்கிஷமாக கருதுகிறாயா?
- HOP Church
- Sep 21, 2020
- 1 min read
விலையுயர்ந்த முத்துக்களை எந்த மனுஷனாவது தெருவில் போடுவானோ?
விலையுயர்ந்த உடைமைகள் பயன்படுத்தப்படாமல் தனியே விடப்பட்டு இருக்கிறதா?
பெரிய சிலாக்கியம் கொடுக்கப்படும்போது அதை அனுபவிக்க தயங்குகிறோமா?
நன்மைகள் நம் கதவைத் தட்டும் பொழுது யார் கதவை திறப்பதற்கு பொறுத்து இருக்கிறார்கள்?
உலகின் விஷயங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பது நாம் அறிவோம்...
தேவனுடைய பிரசன்னம் உலகில் மிக சிறந்த விலைமதிப்பற்றது என்பதை நீ அறிவாயா?
எரேமியா 2:32
ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
தேவன் உனக்கு விலைமதிப்பற்றவராய் இருக்கிறாரா? உன் வாழ்வில் முதலும் முக்கியமானதும் அவர் பெற்றுக்கொள்ள பாத்திரர் என்பதை நீ அறிவாயா?? உன் இரட்சகர் உன் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார் உனக்கு அது கேட்கவில்லையா???


Comments