அவரோடு பேசு
- HOP Church
- Jul 15, 2020
- 1 min read
நீ உன் படுக்கையில் இருக்கும்போது உன் மனதை நிரப்புவது எது?
நாளைய தினத்தில் வரப்போகும் வேதனைகளை நினைத்து வருந்திக் கொண்டு இருக்கிறாயா?
கடந்த காலத்தில் ஏற்பட்ட புண்களை நினைத்து கொண்டு இருக்கிறாயா?
அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு குழப்பத்தில் கலங்குகிறாயா?
உன்மனம் பயத்தினாலும் எதிர்பார்ப்பினாலும் நிறைந்திருக்கிறதா?
அவைகளை நிறுத்திவிட்டு மேய்ப்பன் இடத்தில் பேசு. தாவீது அதை தான் செய்தான்.
சங்கீதம் 63:6
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்
உன்னால் தூங்க முடியாத போது உன் ஆடுகளை கணக்கு பார்க்காதே - உன்னிடத்தில் பேசு! அது உன் இருதயத்திற்கு சந்தோஷத்தை கொண்டு வரும்!! ராச்சாமங்களில் அவரை நினை - அவரையே நினைத்துக் கொண்டிருக்கும்போது மற்ற எல்லாமும் மறந்து போகும்!!!


Kommentare