வீட்டிலே பாவம் இருந்தது....
ஜனங்களால் சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்க முடியவில்லை....
பாவம் மேற்கொள்கின்ற இடத்தில் தேவனால் தங்கியிருக்க முடியாது....
தேவன் பாவியை நேசிக்கிறார் பாவத்தை அல்ல.....
தேவன் நம் நடுவில் வாசமாக இருக்க வேண்டும் என்றால் பாவம் வெளியேற்றப்பட வேண்டும்....
யுத்தத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் பாவம் விலக வேண்டும்.....
பாழாக்கும் காரியங்களை தோண்டி எடுத்து தூக்கி எறிய வேண்டிய நேரம் இது....
தேவன் உன்னை மன்னித்து கழுவ விரும்புகிறார்....
உன் வாழ்க்கையில் உள்ள அழுக்கை எடுத்துப்போட நீ ஆயத்தமா?
யோசுவா 7:12
ஆதலால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்
பாவம் உள்ளே இருக்கும் வரை உன்னால் வெற்றி பெற முடியாது! இனி பாவம் செய்யாதே!! மனம் திரும்புதலின் இருதயத்தோடு அவர் கரங்களுக்குள் ஓடு!!!


Opmerkingen