தாழ்மையாய் இரு!
அநேகருடைய ஆரம்பம் நன்றாக இருக்கும் ஆனால் முடிவில் அது மோசமாகி விடுகிறது...
மகிமை திருடப்பட்டு விட்டதால் முடிவு நன்றாக இருக்காது...
இவையெல்லாம் தேவனை மகிமைப்படுத்த விருப்பமற்ற பெருமையுள்ள இருதயத்தில் இருந்து புறப்படுகிறது...
உன் வாழ்க்கையில் ஆசீர்வாதம் பாய்ந்து வரும் பொழுது நீ தேவனுக்கு மகிமை கொடுக்கிராயா?
நினைவில் கொள் - அவர் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்...
தாழ்மையாய் இருந்து அவருடைய சித்தத்தை உன் வாழ்வில் செயல்படுத்த அர்ப்பணி...
நீதிமொழிகள் 16:8
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை
நீ நன்றாக முடிக்க விரும்புகிறாயா? தாழ்மையாய் இரு!! நீ செய்யும் எல்லாவற்றிலும் தேவனை மகிமைப்படுத்து - அவரே அதற்கு தகுதியானவர்!!!


Comentarios