நீ தேவனை நேசிக்கிறாயா?
- HOP Church
- Nov 16, 2020
- 1 min read
யாக்கோபு உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தான்....
ஆனால் அவனது அன்பு மகன் யோசேப்பு வந்துவிட்டான் என்று கேள்விப்பட்ட தருணத்தில் தனது பலத்தை சேகரித்துகொண்டு எழுந்தான்...
ஒருவர் மேலுள்ள அன்பு உன் உடல் பலவீனத்தை மேற்கொள்ள வைக்கிறது...
நீ உண்மையிலேயே தேவனை நேசிப்பாயானால், அவர் முன் செல்ல உன்னை திடப்படுத்திக் கொள்வாய்...
நீ ஜெபிப்பதற்க்கு மிகவும் பலவீனமாக உணர்ந்தால், "நான் தேவனை எவ்வளவு நேசிக்கிறேன்"? என்று கேட்டுக்கொள்...
நீ ஜெபிக்க மிகவும் பலவீனமாக இருப்பதாக உணரும்போது, அதுவே நீ உண்மையில் ஜெபிக்க வேண்டிய தருணமாகும்...
ஆதியாகமம் 48:2
இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
நீ தேவனை நேசித்தால், அவரைச் சந்திக்க உனக்கு பெலன் உண்டு! தேவன் உன்னிடம் எதிபார்ப்பதெல்லாம் அவரோடுள்ள ஒரு உறவு மாத்திரமே!! தேவனோடு உறவுகொள்ள உன்னை திடப்படுத்த்திக் கொள்!!!


Kommentare