ஒவ்வொரு தேவ பிள்ளையும் நினைப்பதற்கு ஒருநாள் உண்டு...
ஒவ்வொரு தேவ பிள்ளையும் சொல்லுவதற்கு ஒரு கதை உண்டு...
ஒவ்வொரு தேவ பிள்ளையும் மறக்கமுடியாத தேவனோடு உள்ள அனுபவம் உண்டு...
ஒவ்வொரு தேவ பிள்ளையும் முதன்முதலில் தேவனை சந்தித்த இடம் ஒன்று உண்டு...
ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் குறுக்கு சாலையில் எடுத்த திருப்பு முனைகளும் உண்டு...
நினைவில் கொள்வது எப்போதுமே நல்லது, பெத்தேலுக்கு திரும்பு!
ஆதியாகமம் 35:7
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
தேவனுடனான உன் முதல் சந்திப்பை நினைவில் கொள்! அவரை முதன் முதலில் சந்தித்த இடத்திற்கு திரும்பி போ!! தேவனோடுள்ள உன் காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்று சிந்தி- தேவன் மீதுள்ள அன்பு மீண்டும் புதியதாக மாறும்!!!


コメント