top of page

பிறர் மீது கரிசனை!

Writer: HOP ChurchHOP Church

சுயநலமற்றவர் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவே இருப்பார்கள்....


மற்றவர்கள் ஆசீர்வாதமாக இருப்பதைப் பார்க்க நீ கிரியை செய்கின்றாயா?


மற்றவர்களுடைய நலனை குறித்த கரிசனை உனக்கு உண்டா?


மற்றவர்கள் ஆசிர்வாதம் பெறும்படி உன் நிலையை விட்டு வெளியே வர உனக்கு விருப்பம் உனக்கு உண்டா?


பிறர் வாழும்படி சில காரியங்களை விட்டுக்கொடுக்க நீ தயாரா?


மற்றவர்கள் ஆசீர்வாதம் பெறும் போது மகிழ்கிறவர்கள் அனேகர் இல்லை!


பிறரை தங்கள் முடிவை நோக்கி நடத்துவதற்கு உறுதியான தலைமைத்துவம் தேவை....


கிறிஸ்துவின் அன்பு இல்லாமல் மற்றவர்களுக்கு சேவை செய்வது கூடாத காரியம்...


யோசுவா 1:15


கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்றான்


மற்றவர்களை நேசித்து அவர்களுக்கு சேவை செய்! தேவன் கிருபைகளை உன் வாழ்வில் கொடுக்கிறார்!! *பிறர் மீது கரிசனை* தலைமைத்துவத்தின் ஒரு உறுதியான அடையாளம்!!!





 
 

Comments


hop church logo.jpg
bottom of page