top of page
Writer's pictureHOP Church

சுவிசேஷ ஊழியம் செய்வதற்கான தடை - தயக்கம்



நாம் சுவிசேஷ ஊழியம் செய்வதற்கான தடை தயக்கம்


நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு உண்டு. சுவிசேஷ ஊழியத்திற்காக நாம் ஜெபம் செய்வோம். அந்த ஊழியம் நடைபெறுவதற்காக உதவிகளை செய்வோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி மற்றவர்களிடம் சொல்லும் போது மாத்திரம் ஏனோ நமக்குள் ஒரு தயக்கம் காணப்படுகிறது.


தேவன் சொல்லுகிறார் மனுஷர் முன்பாக யார் அவரை அறிக்கை பண்ணுகிறார்களோ அவர்களை தேவன் பிதாவுக்கு முன்பாக அறிக்கை பண்ணுவார். இயேசுவைப் பற்றி சொல்வதற்கு நாம் ஏன் தயங்க வேண்டும்? அவர் நம்முடைய தகப்பன் என்று சொல்லப்படுவதற்கு தயங்கவில்லையே! நமக்காக தன்னுடைய ஜீவனை கொடுத்து நம்முடைய பாவங்களுக்காக மரிக்க அவர் தயங்கவில்லை.


மத்தேயு 10:32


மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்


தயங்காமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி அறிக்கை செய்வோம் நம்முடைய விதையின் பலனை நிச்சயம் அறுவடை செய்வோம்


 

மனப்பாட வசனம்


யோவான் 10:11

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.


 

ஜெபக்குறிப்புகள்


1. தயக்கமில்லாமல் சுவிசேஷ ஊழியம் செய்ய


2. மனுஷனை பிரியப்படுத்த வாழாமல் தேவனைப் பிரியப்படுத்த


3. தேவனுடைய அன்பை உணர்ந்து கொண்டவர்களாய் நடந்து கொள்ள


4. தயக்கமின்றி நமக்கு இயேசுவைப் பற்றி சொன்னவர்கள் மாதிரியை பின்பற்ற


5. கிறிஸ்து நம்மை மீட்ட விதத்தை மறந்து போகாமல் இருக்க


6. கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகளை ஒவ்வொரு நாளும் நினைவு கூற


7. எஸ்தரை போல செத்தாலும் சாகிறேன் என்று புறப்பட்டு செல்ல


8. கிதியோன் போல இருக்கிற பெலத்தோடு போய் சுவிசேஷ ஊழியம் செய்ய


9. வெட்கப்படாமல் இயேசுவை பற்றி சொல்ல



62 views

Comments


hop church logo.jpg
bottom of page