top of page

குருடாக்கபட்ட மனக்கண்கள் திறக்கும்படி ஜெபிப்போம்



குருடாக்கபட்ட மனக்கண்கள் திறக்கும்படி ஜெபிப்போம்


நான்கு ஆத்துமாக்களுக்காக நாம் அனுதினமும் ஜெபித்து வருகிறோம். தேவன் அவர்களை அறுவடைக்கு ஆயத்தமாக்க ஜெபித்து வருகிறோம். குருடாக்கப்பட்ட அவர்கள் மன கண்கள் திறக்கப்படும் படி நாம் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. சில நேரங்களில் நாம் முயற்சி எடுத்து சுவிசேஷ விதையை அவர்கள் இருதயத்தில் விதைத்தாலும் அது பெலன் கொடாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.


தேவனே அவர்கள் ஜெபத்தை கேட்டு நன்மையை செய்தார் என்பதை அறிந்து கொள்ளக் கூடாதபடி பிசாசானவன் அவர்கள் கண்களை குருடாக்கி வைத்திருப்பதே அதன் காரணமாக இருக்கிறது. எனவே அந்த ஆத்துமா இரட்சிக்கப்படுவது நம்பரை ஆசைப்படும் போது அவர்கள் மனக் கண்களை தேவனாகிய கர்த்தர் திறந்தருளும் படி ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிக்க வேண்டும்.


2 கொரிந்தியர் 4:4


தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்



 

மனப்பாட வசனம்


ரோமர் 10 :13

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.


 

ஜெபக்குறிப்புகள்


1. கிறிஸ்துவின் ஒளி அவர்கள் மீது வீச


2. அவர்கள் வாழ்க்கையில் உள்ள இருள் மாற


3. இருதய கடினங்கள் மாற


4. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


5. கல்லான இருதயம் மாறி சதையான இருதயம் உண்டாக


6. நல்ல நிலமாக அவர்கள் மாற


7. இயேசுவை ஏற்றுக் கொள்ள இருக்கும் தடைகள் மாற


8. ஆண்டவர் அவர்கள் வாழ்வில் செய்த நன்மையை காணும்படி அவர்களுக்கு கிருபை உண்டாக


9. இயேசுவே தெய்வம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள


10. கண்கள் திறக்கப்பட்டு அவர்கள் இயேசுவிடம் வந்த சேர



27 views
hop church logo.jpg
bottom of page